மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தல்

0
193

ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் இலச்சினையை பயன்படுத்தி பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை கோரி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகள், இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் இவ்வாறு முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதனை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை ஆட்சேர்ப்பு செயன்முறையின் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்டணம் அரவிடுவதில்லை எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான முறைகேடான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதும் இல்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.