மக்களின் நம்பிக்கையை வீணடித்துள்ள தமிழரசு கட்சி: ஒற்றுமை இல்லாது குழப்ப நிலையில்

0
119

நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்கவே எனவே அவருக்கே வாக்களிக்க வேண்டும் என இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலே ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

தமிழரசுக் கட்சியை நம்பியிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளார்கள். இதனால் ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பிலே பல்வேறு குழப்பம் வருகிறது என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க நாட்டிலே கடந்த ஆட்சி காலத்தில் ஏற்படுத்திய பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் தமது நிலைப்பாடு தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தினார்.