முல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டிகள்!

0
300

வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் மற்றும் சமூக ஆர்வலர் பீற்றர் இளஞ்செழியனிற்கு எதிராக முல்லைத்தீவில் இனந்தெரியாதவர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுவரொட்டிகளில் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக்கொண்டுஇருவரும் தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

இதனூடாக அவர்கள் இந்து பௌத்த மத நல்லிணக்கத்தை குலைக்க முயல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.