யாழில் தொலைபேசி திருடிய நபர்; காட்டிக்கொடுத்த கேமரா!

0
241

யாழ்.திருநெல்வேலி – பரமேஷ்வரா சந்தியில் உள்ள தொலைபேசி திருத்தகத்தில் தொலைபேசி திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை திருத்தகத்திற்கு வந்த இளைஞன் அங்கிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடி சென்றுள்ளார்.

யாழில் நபர் ஒருவரின் மோசமாக செயல்; காட்டிக்கொடுத்த கேமரா! | Robbery Mobile Jaffna

கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் கண்டதை அடுத்து , கண்காணிப்பு கமரா வீடியோ பதிவுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

காட்டிக்கொடுத்த கேமரா

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் வீடியோ பதிவு ஊடாக இளைஞனை அடையாளம் கண்டு , இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , திருடிய கையடக்க தொலைபேசியை தான் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் , வாங்கியவரை தனக்கு அடையாளம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து திருட்டு தொலைபேசியை வாங்கிய நபர் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.