முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியலை வௌியிடப்போவதில்லை..

0
479

கல்வி பொதுத் தரா தர சாதாரணப் பரீட்சைக்கு முதன்முறையாகத் தோற்றிய மாணவர்களில் 75 சதவீமான மாணவர்கள் கல்வி பொதுத் தரா தர உயர்தரத்துக்கு தோற்ற தகுதியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி நாடளாவிய ரீதியில் முதற் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியலை பரீட்சைகள் திணைக்களம் வௌியிடப்போவதில்லை.

சாதாரணத்தரப் பரீட்சையில் எந்தவிதமானப் போட்டிகளும் இல்லை. அதனால் முதற் 10 இடங்களை பிடித்த மாணவர்களை அடையாளங்காண்பதற்கு அவசியம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.