தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நிகழ்வு இன்று

0
27

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு, இன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.

தியாக தீபம் திலீபன் ஆகுதியான நேரமான காலை 10.48 மணிக்குச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.