ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சியின் முடிவே தமிழா்களின் முடிவு!

0
112

நடைபெறவுள்ள இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சியின் முடிவே தமிழா்களின் முடிவு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் இறுதிக் கட்டத்திலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்குமாறு கோரும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கே, பொது மக்கள் வாக்களிப்பர் எனவும் அவர் கூறினார்.