இஸ்லாமாபாத்தில் பதற்றம்; வான்பரப்பை மூடிய பாகிஸ்தான்

0
16

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வான்பரப்பில் ட்ரோன்கள் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (13) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தாலிபான் அமைப்பினரால் ட்ரோன் தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற அச்சுறுத்தலின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.