அலரி மாளிகைக்கு முன்னால் பதற்ற சூழ்நிலை!

0
553

அலரி மாளிகைக்கு முன்னால் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரை பொலிஸ்  அதிகாரி ஒருவர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்காரணமாக குறித்த பகுதியில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.