மாலைதீவுகளின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைந்த இலங்கையின் இரண்டு படகுகளை அந்த நாட்டின் கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது. இலங்கையின் படகுகள் இடைமறிக்கப்பட்டதை மாலைதீவுகள் தேசியப் பாதுகாப்புப் படை இன்று உறுதி செய்துள்ளது.
மாலைதீவுகளின் கடலில் சட்டவிரோதமாக இயங்கியதாக குறித்த படகுகள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. அண்டை நாடுகள் பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இந்த இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் இந்த படகுகளில் எத்தனை பேர் இருந்தனர் என்பதை மாலைதீவுகள் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.



