திசைக்காட்டி அரசாங்கத்தில் இலங்கை செல்வந்த நாடாக மாறும்; அனைவரையும் ஒன்றிணையுமாறு அநுர அழைப்பு

0
257

என்னால் மட்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நான் மந்திரவாதி அல்ல. ஆசியாவிலேயே சிறந்த மூளை என்னிடம் இல்லை. எனவே ஒரு தனி மனிதனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

நாம் ஒற்றுமையாக இருந்தால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க,

எனக்கும் திறமை இருக்கிறது. பலவீனமான புள்ளிகளும் உள்ளன. ஒவ்வொருவருக்கும் திறமையான பலவீனமான புள்ளிகள் உள்ளன. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். ஒன்றிணைந்தே நாட்டை கட்டியெழுப்பும் சக்தியை உருவாக்க வேண்டும். அந்த சக்தி தேசிய மக்கள் சக்தியாக  மட்டுமே இருக்க முடியும்.

ஒரு நாடு ஏழ்மையாக இருந்தால் அந்த நாட்டின் சட்டம், சுகாதாரம், கல்வி ஆகியவை சீர்குலைந்திருந்தால் தற்போதுள்ள அரசாங்கத்தால் எந்த பயனும் இல்லை.

எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நாட்டை வளமான நாடாக மாற்றுவோம். நாட்டை மாத்திரம் வளமாக்குவது பயனற்றது. நாட்டு மக்களும் வளம்பெற வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் இந்த நாட்டை பணக்காரர்கள் நிறைந்த பணக்கார நாடாக மாற்றுவோம்“ – என்றார்.