தத்தளிக்கும் இலங்கை; கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதியில் கொண்டாட்டத்தில் தமிழ் எம்.பி

0
48

இலங்கை புயலின் கோரப்பிடியில் சிக்கி சிதைந்து போயுள்ள இத்தகைய பெரும் துயர காலத்திலும் மலையகத்தை சார்ந்த எம்.பி தனது திருமண வைபத்தை கொழும்பில் விமர்சையாக செய்துள்ளமை பேசுபொருளாகியுள்ளது. இயற்கையின் கோர தாண்டவத்தில் மக்கள் பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர்.

அதிலும், மலையக பகுதியில் மிக மோசமாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இன்று வரையிலும் மண்சரிவிற்குள் சிக்கி மாய்ந்து போன உறவுகளை மீட்க முடியாது துடித்து கொண்டிருக்கின்றனர் மக்கள் பலர் வெளியிடங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களது உறவுகளுக்கு என்ன ஆயிற்று என்று ஸ்தம்பித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்ச்சிப்பது ஒரு புறம் இருக்க மலையகத்தை சார்ந்த ஒரு எம்.பி தனது திருமண வைபத்தை கொழும்பில் விமர்சையாக செய்துள்ளமை பேசுபொருளாகியுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி.