விமான நிலையத்தில் விசேட தேடுதல்; இலங்கையில் காஷ்மீர் தாக்குதல்தாரிகள் ஊடுருவலா?

0
28

சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானம் மற்றும் அதில் வந்த பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று (03) காலை 11.59 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்த UL 122 விமானம் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் நாட்டிற்குள் வந்ததாக எந்த தகவலும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.