அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் விசேட செய்தி

0
555

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு  அடுத்த வாரம்  விசேட அறிவிப்பொன்றை வெளியிட  உள்ளார்.  

இதன்போது ஜனாதிபதி  நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் அல்லது ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை அழைத்து கருத்து  வெளியிடுவார் என தெரியவருகின்றது.  

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இதன்போது அவர் கருத்து தெரிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்த நிலையில்,  புதிய அமைச்சரவை ஒன்று இன்னும்  நிறைவு செய்யப்படவில்லை.  இந்த நிலையில்  புதிய அமைச்சரவை நியமனம் அடுத்த வாரம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.