ஒட்டுசுட்டான் ஆலயத்தில் பொலிஸார் தீபாவளி சிறப்பு பூஜை

0
86

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் பொலிஸாரினால் இன்று (31) மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன தலைமையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 10 பொலிஸ் நிலைய பிரிவுகளில் இருக்கும் விஷேடமாக தமிழ் பொலிஸார் இணைந்து தீபாவளி தினமான இன்று ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தில் பொதுமக்களுக்கும் நாட்டுக்குமாக வேண்டி விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வழிபாட்டில் பொதுமக்களும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார் என பலரும் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பூஜை வழிபாடுகளின் பின்னர் ஆலய வளாகத்தில் வைத்து மரக்கன்றுகளும் பொலிஸாரால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.