ஆறு மாணவர்கள் 100% சராசரி மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை

0
228

டொரன்டோ மாவட்ட கத்தோலிக்க சபையின் நிர்வாகத்தில் இயங்கி வரும்  Father John Redmond பாடசாலையில் ஆறு மாணவர்கள் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலையில், 8 மாணவர்கள் சிறந்த பெருவேறு பெற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாடசாலையின் அதிபர் ஜோன் டொனோபிரியோ (John D’Onofrio) இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

இந்த மாணவர்கள் பாடசாலைக்கு பெருமையை தேடி தந்துள்ளனர். மேலும் எனக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியதாகவும் இவர்கள் சிறந்த திறமை உடையவர்கள் என்பது தமக்கு தெரிந்தது எனவும் பெருமிதமடைந்துள்ளார்.

அமிலியா டெம்போலி (Amelia Campoli), ஹொனோரா மார்பி ( Honora Murphy) டானோ நியான் (Tano Nguyen), நாட்டாலியா சுலிக் (Natalia Zulek), ஸாசாச்ரி ஸெரி (Zachary Xerri ) மற்றும் ரோபோட் சூம்பெக் ( Robert Zupancic) ஆகிய 6 மாணவர்களும் இவ்வாறு 2022 -2023 ஆம்  கல்வி ஆண்டுக்கான பாடசாலை தேர்வில் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த மாணவர்கள் சீரிய ஒழுக்கத்தையும், மிகுந்த அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் வெளிப்படுத்தியதாகவும் இவர்கள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அதிபர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.