எரிபொருள் விலையை உயர்த்தியது சினோபெக்

0
19

இலங்கையில் மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் விலையும் திருத்தப்பட்டுள்ளன.

அதன்படி இன்று (31) நள்ளிரவு முதல் சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, 313 ரூபாயாக இருந்த சுப்பர் டீசலின் விலையை 331 ரூபாயாக உயர்த்த நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.