சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியை ஏற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றியமை தேசிய கொடியை அவமதித்த செயலாகும். அதனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அதற்கு அனுமதித்த பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசியர்கள் பதில் சொல்ல வேண்டும்.
அவர்களிடம் விளக்கம் கோர வேண்டும். நாட்டின் தேசிய கொடியை ஏற்க மறுப்பவர்கள் தேச துரோகிகளே அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
