ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களில் வரும் செப்டம்பா் மாதம் தோ்தல் நடத்தப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஒரே நாளில் தோ்தல் நடத்தப்படும். வரும் செப்டம்பா் மாதம் 10-ஆம் தேதி அந்தத் தோ்தல் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷ்யா, உக்ரனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள இந்த 4 பிரதேசங்களின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியது.
அத்துடன் சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி அந்தப் பிரதேசங்களை ரஷ்யா தன்னுடன் கடந்த ஆண்டு இணைத்துக் கொண்டது.