தயிர்வடையில் கயிறு; அதிகாரிகள் அதிரடி!

0
25

சாய்ந்தமருது பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கல்முனை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கொட்டும் மழைக்கு மத்தியில் சோதனை நடவடிக்கைகள் நேற்று (06) முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்ளின் பங்கேற்புடன் வீதியோர சந்தை மற்றும் பெண்கள் சந்தை (Ladies Market) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது அங்கு காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டதுடன் எதிர்காலத்தில் அடிக்கடி பரிசோதனைகள் நடைபெறும் என்பதனையும் தெரிவிக்கப்பட்டது.

இதே வேளை உணவகங்கள் பரிசோதனை உட்படுத்தப்பட்டதுடன் அதன் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்கின்மையுடன் காணப்பட்டதுடன் அதை சரி செய்வதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் இதில் நுகர்வுக்கு பொருத்தமற்ற கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.