ஐரோப்பிய நாட்டைத் தாக்க தயாராகும் புடின் – ஜெலென்ஸ்கி எச்சரிக்கிறார்

0
28

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனைத் தவிர மற்றொரு ஐரோப்பிய நாட்டையும் தாக்கத் தயாராகி வருவதாக விளாடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் போது டிரம்புடனான சந்திப்பிற்குப் பின்னர் ஜெலென்ஸ்கியின் கருத்துக்கள் வந்துள்ளன. உக்ரைனில் போர் முடிவடையும் வரை புடின் காத்திருக்க மாட்டார். அதற்கு முன்னதாக அவர் மற்றொரு ஐரோப்பிய நாட்டைத் தாக்குவார்.

புடின் எந்த நாட்டைத் தாக்குவார் என்று சொல்ல முடியாது. இருப்பினும் புடின் தாக்க விரும்புகிறார் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்கும் திறன் எவ்வளவு என்பதை புடினும் ரஷ்யாவும் தொடர்ந்து சோதித்து வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெளிவுபடுத்தினார்.

டென்மார்க், போலந்து மற்றும் ருமேனியா போன்ற நாடுகளில் ரஷ்ய ட்ரோன்கள் தோன்றுவது இதன் ஒரு பகுதியாகும் என்று ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

போலந்தை குறிவைத்து 92 ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறினார். அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டன. எஸ்தோனியாவில் ரஷ்ய போர் விமானங்களின் வருகையும் விமான அமைப்பின் திறன்களை சோதிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள ஒரு குறிப்பிட்ட வான் பாதுகாப்பு அமைப்பு விரைவில் யதார்த்தமாக மாற வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஜெலென்ஸ்கியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வாரமும் ரஷ்யா உக்ரைனில் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது.

மக்கள் தொகை மிகுந்த சபோரிஷியா நகரில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இரண்டு வாரங்களில் ரஷ்யா உக்ரைனில் 3,500 ட்ரோன்கள் மற்றும் 200 ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.