யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றும் (14) வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையில்லா பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றையதினம் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
