பிரதமர் ரணில் இன்று இரவு மக்களுக்கு விசேட உரை!

0
952

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமை மறுக்கப்பட்டமை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தின் ஒரு பகுதியை பிரதமருடன் பகிர்ந்தமையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் தனதுரையில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளார்.