உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு, விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடி இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

0
32

உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு மற்றும் விற்பனை செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மிசோரம், மணிப்​பூர், அசாம் மாநிலங்​களில் பல்​வேறு அரசு நலத்​திட்​டங்​களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளுர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடையும் என்றும்
பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இதேவேளை காங்​கிரஸ் குறித்து இந்​தி​யர்​கள் மிகுந்த எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​திய இராணுவத்​துக்கு காங்​கிரஸ் ஆதரவளிக்​க​வில்​லை என குற்றம் சுமத்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்​தான் ஆதரவு பெற்ற தீவிர​வா​தி​களுக்கு அந்த கட்சி ஆதரவு அளித்​ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.