பாலியல் கடத்தல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ-க்களை தங்கள் இணையத்தில் பதிவிட அனுமதித்த பார்ன் ஹப் நிறுவனத்தின் பேரண்ட நிறுவனமான Aylo விற்கு 1.8 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்த அமெரிக்க அரசு. மேலும், பெண்களின் அனுமதி இன்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை எக்காரணம் கொண்டும் பதிவு செய்ய கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது
உலகின் முன்னணி ஆபாச வீடியோ இணையமான பார்ன் ஹப்-ன் பேரண்ட நிறுவனமான Aylo அபராதமாக $1.8 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் பாலியல் கடத்தல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள், அவர்களின் சம்மதம் / முன்னறிவிப்பு அல்லது அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல், தவறான முறையில் மேல்குறிப்பிடப்பட்ட ஆபாச இணையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

GDP (GirlsDoPorn) எனும் நெட்ஒர்க் மூலம் நிறைய வீடியோக்கள் பதிவாகி இருந்தன. இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் 2016 முதல் 2019 இடைப்பட்ட ஆண்டுகளில் நிறைய புகார்கள் அளிக்கப்பட்டன. Aylo நிறுவனத்திற்கு கீழ் இயங்கி வந்த பல ஆபாச வீடியோ இணையங்களில் இந்த வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தன.
பெண்கள் அனுமதி இன்றி கூடாது
இந்த வீடியோ பதிவுகள் பாதிக்கப்பட்ட பெண்கள் அறியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்கள், அவர்கள் சம்மதம் இன்றி எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து எந்த ஒரு சம்மதமும் பெறாமல் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை தங்கள் இணையத்தில் பதிவு செய்த Aylo நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், குறிப்பிட்ட அந்த நெட்ஒர்க் பதிவிட்ட எல்லா முறையற்ற வீடியோக்களையும் இணையத்தில் இருந்து நீக்கியிருக்கிறது சம்மந்தப்பட்ட நிறுவனம்.
புது நெறிமுறைகளை அறிவித்த நிறுவனம்
மேலும், இத்தகையான தவறுகள் இனி ஒருபோதும் நடக்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கடந்த 2020ம் ஆண்டில் இருந்து நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது பார்ன் ஹப் நிறுவனம்.
மேலும், இனிமேல், வெரிஃபைடு அக்கவுண்ட்களில் இருந்து பதிவாகும் எல்லா வீடியோக்களும் தணிக்கைக்கு பிறகே இணையத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்றும், வெரிஃபைடு ஆகாத எந்த ஒரு அக்கவுண்டில் இருந்தும் பதிவேற்றம் செய்ய முடியாது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வரும் புத்தாண்டில் இருந்து புதிய நெறிமுறைகள் மற்றும் வெரிஃபிகேஷன் முறைகளை உட்படுத்த இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
