ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற அந்த விமானத்தின் பணிக் குழாமினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, விமானத்தின் வழித்தடத்தை மாற்றி இந்தோனேசியாவில் விமானத்தை தரையிறக்க விமானி தீா்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் உயிருக்கு போராடியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது அவர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குணமடைந்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.



