3 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

0
34

நாடாளுமன்றம் புதன்கிழமை (03) காலை 9.00 மணி வரை ஒத்திவைக்கப்படும் என்று சபாநாயகர்  ஜகத் விக்ரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

இன்று பிற்பகல் 12.30 மணிக்கு முன்னர் செலவின தலைப்புகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபை ஒத்திவைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற விவகாரக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் இந்த முடிவை சபைக்கு தெரிவித்தார். நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.