வடக்கில் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் திறப்பு

0
223

வடமாகாண ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் இன்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்சினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகம் வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுநரை தொடர்பு கொள்வதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 மாதத்தில் இரு தடவை ஆளுநர் விஐயம்

இந்நிலையில் மக்களின் சிரம நிலையை கருத்தில் கொண்டு குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. வாரநாட்களில் மக்கள் தமது முறைப்பாடுகளை குறித்த அலுவலகத்தில் தெரிவிக்க முடியும்.

என்பதுடன் மாதத்தில் இரு தடவைகள் ஆளுநர் இங்கு விஐயம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் திறப்பு விழா நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டி.ரஞ்சன், உள்ளூராட்சி அதிகாரிகள், ஆளுநர் அலுவலக அதிகாரிகள், நகரசபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.