எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு..

0
205

எரிவாயுவின் விலையை  உயர்த்தப் போவதில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.  

அக்டோபர் மாதம் நடைமுறையில் இருந்த விலையிலேயே நவம்பர் மாதமும் எரிவாயுவை விற்பனை செய்வதற்கு  அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.  

உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இம்மாதம் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தாலும்,  நடைமுறையில் இருக்கும் விலையிலேயே இம்மாதமும் தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இதன்படி, வாடிக்கையாளர்கள்  12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு  சிலிண்டரை 3,985 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை 1,595 ரூபாவிற்கும் தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம் என அந்த நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் 

இதேவேளை, நவம்பர் மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைககு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,12 கிலோ கிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 3,565 ரூபாவாகும்.

மேலும், 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை  38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக1,431 ரூபா அறிவிக்கப்பட்டுள்து.

அத்துடன், 02 கிலோகிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை18  ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 668 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது