புதிய இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையை வந்தடைந்தார்: நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கடமைகளை ஏற்பார்

0
186

இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜா இன்று (டிச. 20) கொழும்பு வந்துள்ளார். நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.

முன்னதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக செயற்பட்ட கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக பெயரிடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.