யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் நாளான இன்றைய தினம் நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன் மாவீரர் நாளான இன்று அஞ்சலி செலுத்தப்படுகின்றது.
மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மாவீரர்களுக்கு சுடரேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.






