வட்டவளை டயரி பாம் தோட்டத்தில் இன்று மாடுகளை சட்டவிரோதமாக விற்க முற்பட்டதனை பிரதேச மக்கள் கையும் களவுமாக மடக்கிப்பிடித்துள்ளனர். குறித்த பாற் பண்ணையில் மாடுகளை வளர்க்கும் தொழிலில் மக்கள் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் பிரதேச மக்களும் அந்த மாடுகளை நம்பியே தம் வாழ்வாதாரத்தையும் கொண்டு செல்கின்றனர். எனினும் நிர்வாகம் மாடுகளை சட்ட விரோதமாக விற்கப்படுவதை அறிந்து பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர்.

