முதுகெலும்பு இல்லாத தமிழரசு கட்சி சவாலுக்கு வரட்டும் பார்ப்போம்: அரசியலிலிருந்து வெளியேறத் தயார் என்கிறார் சிவாஜிலிங்கம்

0
113

தமிழரசு கட்சி முதுகெலும்பில்லாதது என சிவாஜிலிங்கம் விமர்சனம் வெளியிட்டுள்ளார். யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழரசு கட்சியா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறது எனக் கேள்வியெழுப்பியதோடு, இவர்கள் கை காட்டும் ஆட்களுக்கு தமிழ் மக்கள் முதலில் வாக்களிக்கின்றார்களா என்று பார்ப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்கள் இருக்கின்றனர் முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை,முதுகெலும்பில்லாத தமிழரசுகட்சி சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்ற சவாலுக்கு வரட்டும் பார்ப்போம் எனவும் சவால் விடுத்துள்ளார்.

மேலும் மக்கள் வாக்கெடுப்பு இல்லாமால் சுய நிர்ணய உரிமையை அடைய முடியும் எனக் கூறினால் நாங்கள் அரசியலை விட்டு போகின்றோம், ஆடைகள் இன்றியும் போகின்றோம் எனத் தெரிவித்தார்.