கரூர் சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 40

0
22

தமிழகத்தின் கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் நேற்று இரவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

முன்​ன​தாக, காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்​சா​ரம் செய்ய பொலிஸ் தரப்​பில் அனு​மதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், நாமக்​கல்​லில் பிரச்​சா​ரம் செய்​து​விட்டு பிற்​பகல் 03 மணிக்​குப் பிறகு​தான் விஜய் புறப்பட்டார். இதனிடையே கரூர் வேலு​சாமிபுரத்​தில் பகல் 12 மணி முதல் தொண்​டர்​கள், இரசிகர்​கள் கூடினர்.

கரூர் மாவட்ட எல்​லை​யான வேலா​யுதம்​பாளை​யத்​தில் இருந்தே கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் பிரச்​சா​ரப் பேருந்து மிக​வும் மெது​வாக நகர்ந்​தது. இதனால் இரவு 7.15 மணிக்​கு​தான் பிரச்​சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.

அங்கு விஜய் பேச ஆரம்​பித்​த​போது, அவரது மைக் வேலை செய்​ய​வில்​லை. அவரது பேச்​சைக் கேட்​ப​தற்​காக பின்​னால் இருப்​பவர்​கள் நெருங்​கியடித்​த​படி பிரச்​சா​ரப் பேருந்தை நோக்கி வந்​தனர். இதனால் முன்​னால் காத்​திருந்​தவர்​கள் நெரிசலில் சிக்​குண்டனர்.

விஜய் பேசிக் கொண்​டிருந்​த​போதே மூச்​சுத் திணறி பலர் அடுத்​தடுத்து மயங்கி விழத் தொடங்​கினர். மேலும், அந்த ​பகு​தி​யில் இருந்த மரக்​கிளை உடைந்து விழுந்​த​தி​லும் சிலர் காயமடைந்​தனர். விஜய் பிரச்​சாரத்தை முடித்து கிளம்​பிய பின்​னரே அவர்​களை மீட்க முடிந்​தது.

இதன்போது ஆம்​புலன்ஸ் மூலம் மீட்​கப்​பட்ட பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்​டோர் கரூர் காந்தி கிராமத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இவர்​களில் குழந்​தைகள், பெண்​கள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயி​ரிழந்​தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.