உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்படுகின்றமைக்கு அமைய கடன் வட்டி வீதங்களை உடனடியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.