விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கி கணக்கில் உள்ள பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கி கணக்கில் 9 கோடி ரூபாய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபர் கிருஸ்ணா வங்கி கணக்கில் உள்ள பணம் புலம்பெயர் பினாமிகளினது வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
புலம்பெயர் தமிழர்களிடம் நிதி பெற்று தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்து வருவதாக காட்டிக்கொள்ளும் யூடியூபர் கிருஸ்ணா, யுவதி ஒருவர் தொடர்பில் காணொளி வெளியிட்டு சிக்கலில் மாடிக்கொண்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.