தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆனந்த உட்பட கட்சி மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், சிறப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை, முதல்வர் வேட்பாளர் விஜய் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.