தேசிய கொடியை அவமதித்தால் அதிரடி நடவடிக்கை..

0
224

தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளது.

கண்காணிப்பதற்கு தனி குழு 

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கொடியை அவமதிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை | Galle Face Road Closed

அத்தோடு தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.