வவுனியா சீனி தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் எனக்கு தெரியாது: வடமாகாண ஆளுநர்

0
369

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுனர் பீ.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஆளுனரின் இணைப்பு அலுவகத்தை நேற்று (26.07.2023) திறந்து வைத்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது ஊடகவியலாளர்கள் ‘சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது’ இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர்.

காணி வழங்கல்

இதற்கு பதிலளித்த அவர் வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு உண்மையில் எதுவும்  தெரியாது என கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக ஊடகங்களுக்கு மறைக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.