ஹீரோவான கனேமுல்ல சஞ்சீவ கொலை குற்றவாளி; நாடாளுமன்றில் சீறிய எம்.பி

0
3

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை ஒரு ஹீரோவாக மாற்றியதற்காக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று கண்டனம் வெளியிட்டார்.

இன்று(21) நடாளுமன்றத்தில் உரையாற்றிய சாமர சம்பத் தசநாயக்க, கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தை ஊடகங்கள் கையாளப்பட்ட விதத்தையும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் படங்கள் அதிகளவாக பகிரப்பட்டதையும் விமர்சித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் படங்களைப் பகிர அனுமதிக்காதீர்கள். படங்களைப் பாருங்கள், அவர் அதிகாரிகளுடன் அன்பாக நடந்து கொள்வது போல் தெரிகிறது என கூறினார். அத்துடன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களுக்குள் சந்தேகநபர் பிடிபட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பொலிஸாரின் திறமையால் அல்ல, டுபாயிலிருந்து வந்த ரகசிய தகவலின் காரணமாகவே என்றும் சாமர சம்பத் தசநாயக்க இதன்போது மேலும் தெரிவித்தார்.