யாழ்.மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழை!

0
456
TOPSHOT - A Sri Lankan man carries a child through floodwaters in the suburb of Kaduwela in capital Colombo on May 17, 2016. Emergency workers in Sri Lanka on May 17 found the bodies of a woman and two children killed in a landslide, taking the toll from two days of heavy rain to 11, with thousands more forced to flee their homes. / AFP / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

யாழ்.மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியிலிருந்து 11.30 மணிவரையான 3 மணித்தியாலங்களில் 39.9 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வானிலை அவதான நிலையத்தின் கடைமை நேர அதிகாரி ரீ.பிரதீபன் தெரிவிக்கையில், நேற்றுமுன்தினம் காலை 8:30 மணியிலிருந்து நேற்று காலை 8:30 மணிவரை அச்சுவேலிப் பகுதியில் 8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்போது பருத்தித்துறை பகுதியில் 0.6 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் 0.9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று அதிகாலையில் யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நீடித்துள்ளது.