பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

0
17

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் குறித்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டுள்ளது.

தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமான செயல் என உத்தரவிடக்கோரி பிள்ளையானால் குறித்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விதம், தடுத்து வைக்கப்பட்டுள்ள முறைமை ஆகியன தவறான செயல்கள் எனவும் மனுதாரர் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்த காவல் துறையினர் எதிர்பார்த்துள்ளனர். இதற்கான அனுமதியை கோரி பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.