8 வருடத்தின் பின் விடுதலையானவர் மீண்டும் கைது!

0
218

சிறைச்சாலையில் 8 வருடகாலம் தண்டனை அனுபவித்து தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் தலங்கம, தலாகென, முல்லேரியா மற்றும் பேதியாகொடை போன்ற பகுதிகளில் ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேக நபரிடம் இருந்து 10.4 கிராம் ஐஸ் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவரை நேற்று புதன்கிழமை (04) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.