கீதா உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் ஐவர் பதவி நீக்கம்: ஜனாதிபதி நடவடிக்கை

0
153

உடன் அமுலாகும் வகையில் இராஜாங்க அமைச்சர்கள் ஐவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார். கீதா குமாரசிங்க, ஷசீந்திர ராஜபக்ச, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 47 (3) (a) பிரிவின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.