10 ஆண்டுகளுக்கு பின்னர் மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

0
128

10 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு முழுவதும் மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு தொடங்க்கப்பட்டுள்ளது. தேசிய மீன்பிடிக் கப்பல் கணக்கெடுப்பு இன்று (4) பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் தொடங்கி ஆகஸ்ட் 20 வரை தீவு முழுவதும் தொடரும்.

ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் நடத்தப்படும் தொகை கணக்கெடுப்பு இலங்கையின் 50,000 மீன்பிடி படகுகளின் தரவுகளைப் புதுப்பிப்பது, பழுதடைந்த படகுகளை அகற்றுவது, சுற்றுலாவை ஆதரிப்பது மற்றும் உரிமங்களை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்காத கப்பல்கள் அடுத்த ஆண்டு உரிமம் புதுப்பிப்புகளுக்கு தகுதி பெறாது.