நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு காராத்தே தெரியும் என்றும் அவரை பற்றி ஊடகங்களில் கதைத்து அவரை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என ஊடகவியலாளர்களிடம் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் (14) இடம்பெற்றது.

கலந்துரையாடல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெறவுள்ளது. அதேவேளை குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கலந்து கொள்ளாதமை குறித்து கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.