10 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சித்தப்பா; காட்டிக்கொடுத்த முறைப்பாட்டு பெட்டி

0
30

தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலே ஆர பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் சித்தப்பா நேற்று (07) தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள முறைப்பாடு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கடிதமொன்றை, வகுப்பு ஆசிரியரொருவர் வாசித்தன் மூலம் இது தொடர்பாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஆசிரியர் பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமி தனது பாட்டியின் வீட்டில் வைத்து பல சந்தர்ப்பங்களில் சந்தேக நபரான 24 வயதுடைய திருமணமான இளைஞனால் கடுமையாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.