நுவரெலியாவில் மற்ற ஆண்டுகளில் டிசம்பரில் தொடங்கும் பனி மழை இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் துவங்கியுள்ளது. மழையில்லாத போதும் இந்நாட்களில் அழகிய வானிலையால் காலையில் கடும் குளிர் எட்டு டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் தினமும் காலை வேளைகளில் பனிப்பொழிவு ஏற்படுகின்றது.
பூச்செடிகள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட காய்கறித் தோட்டங்களின் மீது பனிப்பொழிவு விழுந்து இருந்ததால் சுற்றுச்சூழல் முழுவதும் இரு கண்களையும் வசீகரப்படுத்தும் அளவில் வெள்ளை நிறத்தில் காண முடிந்தது.
நுவரெலியா நகர எல்லை, மகஸ்தோட்டை, சாந்திபுர, மீபிலிமன அம்பேவெல மற்றும் ஏனைய பிரதேசங்களில் அதிகாலை 05:00 மணி முதல் காலை 07:30 மணி வரை இந்த மனதைக் கவரும் பனிப்பொழிவு நிலவியது.