இலங்கையில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள், தங்கள் அலுவலகங்களை இயக்குவதற்கு அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குமாறு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இது தொடர்பில் தூதரகங்கள் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அதேவேளை பல்கலைக்கழக விடுதிகளுக்கும் அமைச்சர்களின் சொகுசு வீடுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தவகையில் தற்போது அமைச்சர் சொகுசு வீடுகளை கோரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கை 20 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.