2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் ! நால்வர் அதிரடி கைது

0
155

இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பில் தமிழகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு பிரிவினால் கடந்த சனிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கோவை குண்டு வெடிப்பு

அரபி வகுப்புக்களின் ஊடாக மாணவர்களை தீவிரவாத தாக்குதல்களுக்கு ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை குண்டு வெடிப்பு மற்றும் தமிழகத்தில் இஸ்லாமிய அரசுக்கு ஆட்சேர்ப்பு ஆகிய வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட நால்வர் | Easter Attack 4 Arrested After Nia Raids

மெட்ராஸ் அரபி கல்லூரி மற்றும் கோவை அரபிக்கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்த இடங்களிலேயே இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது பல நவீன தொழில்நுட்ப கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.